வக்காத்துக் குளம்

ஏழு வயதில் விளையாட்டாய் சந்தமாமா பாடிக்காட்டிய சிறுவர் பாடலொன்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை எழுபதுகளின் முழுமையாய் புரிய வைக்கிறார். இதனூடாக இந்நாவலின் கதைப்பின்னல் (Plot) தத்துவச்சார்பு கொண்டதாகவே நம்மால் உணரமுடிகிறது.

இந்நாவல் தரும் வாழ்க்கை பற்றிய மதிப்பீடு மிகத் துல்லியமானது. விசாலமானது.

இனி எஞ்சிய காலமெல்லாம் வக்காத்துக்குளமும் அதன் நித்திய ஹீரோ சாந்தமாமாவும் நம் நினைவுகளுடன் கூடவே பயணப்படப் போவதைத் தவிர்த்திட முடியாது போலும்.

எஸ். பாயிஸா அலி
கிண்ணியா

FathimaBooks.com CommonFolks

Description

மரக்காலையொன்றில் நேர்த்தியாய் அடுக்கப்பட்டிருக்கும் அரிந்த தண்டுத் துண்டங்களின் குறுக்குவெட்டு முகத்தை உற்று நோக்கியதுண்டா? நீரலைகள் விரிந்தலைவது போலத் தெரியும் அழகழகான வளைகோடுகள் அதில் பதிந்திருக்குமே. காலத்தின் சாட்சியாகிப்போன ஆண்டுவளையங்களெனும் அக்கோட்டுச் சித்திரங்களைக் கண்டாலே, குறித்த அம்மரம் யாரிடமும் சொல்லாத தன் இளமைக் காலத்தின் பேரிரகசியங்களையெல்லாம் அதற்குள் புதைத்து வைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றும்.

அம்மரத்துண்டங்கள் சீவிச் செப்பனிடப்பட்டு வடிவமைக்கப்படும் அகன்ற கதவுகளுக்கருகில் சென்றாலுங்கூட ஆர்வமாய் அச்சித்திரவளையங்களைத் தொட்டுத் தடவிப் பார்ப்பேன். மிக அமைதியாய் தனித்திருக்கும் அக்கதவுகளோ தமக்குள் பதித்து வைத்திருக்கும் வாழ்நாளின் மகிழ்ச்சி, நிறைவு, ஏக்கம், தவிப்பு சோகங்களையெல்லாம் தன் விருட்ச மொழியில் மிக ரகசியமாய் என்னோடு மட்டும் உரையாடுவது போலவே எனக்குத் தோன்றும்.

Additional information

Book Type

Soft Cover

Category
Tags

Reviews

There are no reviews yet.

Add a review

Your email address will not be published. Required fields are marked *